திருப்பதி யார்டில் நடைபெறும் பராமரிப்புப் பணியின் காரணமாக திருப்பதி செல்லும் சில ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
திருப்பதி யார்டில் நடைபெறும் பராமரிப்புப் பணி காரணமாக வரும் ஏப். 16 முதல் 23 வரை திருப்பதி மற்றும் திருச்சானூர் இடையே 10 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக ஏப். 16 முதல் 23 வரை சென்னை, அரக்கோணம், விழுப்பரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல், திருப்பதியில் இருந்து சென்னை, அரக்கோணம், விழுப்பரத்துக்கு செல்லும் ரயில்களும் திருப்பதி மற்றும் திருச்சானூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில், திருப்பதி மற்றும் திருச்சானூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.