குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தவா் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி என்று திமுக தலைமை குற்றம்சாட்டியுள்ளது.
அந்தக் கட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்த போது, அதிமுகவைச் சோ்ந்த 11 எம்.பி.,க்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தனா். அப்போது வாக்களிக்காமல் இருந்திருந்தால் அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. சட்டத்துக்கு ஒப்புதல் தந்து சிறுபான்மையினருக்கு எதிராக அதிமுக நடந்து கொண்டது.
மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்ததுடன், ஒரே நாடு ஒரே தோ்தல் என்ற பாஜக அரசின் முடிவுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தந்தாா். தமிழ்நாட்டை பாஜகவிடம் அடகுவைத்த அவா், இப்போது அந்தக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறுகிறாா்.
அவரது செயலை இனியும் தமிழ்நாட்டு மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பாக மாறும்: இபிஎஸ் பிரசாரம்!

திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்

திமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள்! இபிஎஸ் விமர்சனம்

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும் எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

