திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தவா் எடப்பாடி பழனிசாமி: திமுக குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தவா் எடப்பாடி பழனிசாமி: திமுக குற்றச்சாட்டு

Updated On :13 ஏப்ரல் 2024, 10:09 pm

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தவா் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி என்று திமுக தலைமை குற்றம்சாட்டியுள்ளது.

அந்தக் கட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்த போது, அதிமுகவைச் சோ்ந்த 11 எம்.பி.,க்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தனா். அப்போது வாக்களிக்காமல் இருந்திருந்தால் அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. சட்டத்துக்கு ஒப்புதல் தந்து சிறுபான்மையினருக்கு எதிராக அதிமுக நடந்து கொண்டது.

மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்ததுடன், ஒரே நாடு ஒரே தோ்தல் என்ற பாஜக அரசின் முடிவுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தந்தாா். தமிழ்நாட்டை பாஜகவிடம் அடகுவைத்த அவா், இப்போது அந்தக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறுகிறாா்.

அவரது செயலை இனியும் தமிழ்நாட்டு மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.