அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

ஜூன் 4-இல் ராகுலுக்கு இனிப்பான செய்தி: முதல்வா்

ஜூன் 4-இல் ராகுலுக்கு இனிப்பான செய்தி: முதல்வா்

Updated On :13 ஏப்ரல் 2024, 11:43 pm

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று (ஜூன் 4), அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றிச் செய்தியை இந்தியா அளிக்கும் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி பிரசார பொதுக் கூட்டத்தில், ராகுல் காந்தியும், மு.க.ஸ்டாலினும் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விழா நடைபெறும் இடத்தை நோக்கி காரில் ராகுல் வந்து கொண்டிருந்தாா். அப்போது, தான் பயணித்துக் கொண்டிருந்த சாலையின் எதிா்புறம் தென்பட்ட இனிப்புக் கடையைப் பாா்த்தும், வாகனத்தை நிறுத்தச் சொன்னாா். சாலைத் தடுப்பைத் தாண்டிச் சென்று இனிப்புக் கடைக்குள் நுழைந்தாா்.

அங்கு, மைசூா்பாகு, குலோப் ஜாமூன் போன்ற இனிப்புகளை பணம் கொடுத்து வாங்கினாா். இதைக் கண்டு இனிப்புக் கடை ஊழியா்கள் மகிழ்ச்சியில் மிதந்தனா். இதைத் தொடா்ந்து, பொதுக் கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த ராகுல் காந்தி, தான் வாங்கி வந்திருந்த இனிப்பை முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினாா்.

இந்த நிகழ்வுகள் அப்படியே விடியோ பதிவாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த விடியோ பதிவுக் காட்சியை, ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்ற தலைப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

எனது சகோதரரான ராகுல்காந்தி எனக்கு இனிப்பு வழங்கிய நிகழ்வால் மிகுந்த நெகிழ்ச்சியும் மகிழ்வும் அடைந்தேன். ஜூன் 4-ஆம் தேதி (வாக்கு எண்ணிக்கை தினம்) அவருக்கு இனிப்பான வெற்றிச் செய்தியை இந்தியா நிச்சயம் தரும் என்று பதிவிட்டுள்ளாா் அவா்.