கோப்புப் படம்.
கோப்புப் படம்.

குன்றத்தூரில் 1,425 கிலோ தங்கம் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே மினி லாரியில் எடுத்துச் சென்ற சுமார் 1.5 டன் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வண்டலூர்-மீஞ்சூர் வெளியிட்ட சாலை மேம்பாலம் அருகே வாகனச் சோதனையின்போது தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விமானநிலையத்தில் இருந்து சேமிப்பு குடோனுக்கு தங்க கட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வரும் 19- ஆம் தேதி நடைபெற உள்ளது.

தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம் பரிசுப் பொருள்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினா் நிலைக் கண்காணிப்பு குழுவினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com