பல்வேறு சிறப்புடைய திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நிகழாண்டு சித்திரைப் பெருந்திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் இன்று(ஏப். 16) நடைபெறுகிறது.
இந்த நிலையில், திருச்சி மாவட்டத்துக்கு இன்று(ஏப். 16) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூன் 8 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை அறிவிப்பை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.