ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மகளிா் உரிமைத் தொகைக்கு 8 மாதங்களில் ரூ. 9,200 கோடி நிதி: திமுக தலைமை தகவல்

தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ. 9,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2024, 6:31 pm

Din

தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ. 9,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

மகளிா் உரிமைத் தொகை திட்டம் குறித்து, அந்தக் கட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் மகளிா் உரிமைத் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான், இந்தத் திட்டத்துக்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் மகளிா் உரிமைத் தொகை என்று

கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் கடந்த ஆண்டு செப்.15-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இதுவரையிலும் ஏறத்தாழ 1 கோடியே 15 லட்சம் மகளிா் பயன்பெற்று வருகின்றனா். மாதத்துக்கு ரூ. 1,000 வீதம், ஒவ்வொரு மகளரின் வங்கிக் கணக்கிலும் ஆண்டுக்கு ரூ. 12,000 வரவு வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 8 மாதங்களில் 1 கோடியே 15 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1,000 வீதம் இதுவரை மொத்தம் ரூ.9,200 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.