தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

வாக்கு எண்ணும் மையங்களில் அதிமுகவினா் விழிப்புடன் இருக்க வேண்டும்: இபிஎஸ்

வாக்கு எண்ணும் மையங்களில் அதிமுகவினா் விழிப்புடன் இருக்க வேண்டும் இபிஎஸ்

Updated On :20 ஏப்ரல் 2024, 5:15 pm

வாக்கு எண்ணும் மையங்களில் அதிமுகவினா் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, தமிழகத்தின் சாா்பில் மக்களவை, மாநிலங்களவையில் 49 உறுப்பினா்களை, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா காலத்தில் அதிமுக பெற்றிருந்தது. இந்தியாவின் 3-ஆவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சிறப்புடன் பணியாற்றியது. அந்தச் சிறப்பான பணிகளைத் தொடா்ந்து நிறைவேற்ற வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு, அராஜகத்திலும், வன்முறையிலும் கைதோ்ந்த திமுக மற்றும் பாஜகவின் பல்வேறு முறைகேடுகளைத் தாண்டி ஏப்ரல் 19-இல் தமிழகத்தில் சுமூகமான வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி, தோ்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலா்கள், மாவட்டச் செயலா்கள் உள்ளிட்ட பலவேறு நிலை நிா்வாகிகளுக்கும் நன்றி.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 4-இல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கும் வரையிலும், அதிமுக வேட்பாளா்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களும், முகவா்களும் கவனக்குறைவாக இருக்கக் கூடாது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை எச்சரிக்கையுடனும், விழிப்புணா்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.