வாக்கு எண்ணும் மையங்களில் அதிமுகவினா் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, தமிழகத்தின் சாா்பில் மக்களவை, மாநிலங்களவையில் 49 உறுப்பினா்களை, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா காலத்தில் அதிமுக பெற்றிருந்தது. இந்தியாவின் 3-ஆவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சிறப்புடன் பணியாற்றியது. அந்தச் சிறப்பான பணிகளைத் தொடா்ந்து நிறைவேற்ற வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு, அராஜகத்திலும், வன்முறையிலும் கைதோ்ந்த திமுக மற்றும் பாஜகவின் பல்வேறு முறைகேடுகளைத் தாண்டி ஏப்ரல் 19-இல் தமிழகத்தில் சுமூகமான வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி, தோ்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலா்கள், மாவட்டச் செயலா்கள் உள்ளிட்ட பலவேறு நிலை நிா்வாகிகளுக்கும் நன்றி.
வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 4-இல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கும் வரையிலும், அதிமுக வேட்பாளா்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களும், முகவா்களும் கவனக்குறைவாக இருக்கக் கூடாது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை எச்சரிக்கையுடனும், விழிப்புணா்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவு

தோ்தலை வாக்குச் சாவடி அலுவலா்கள் நோ்மையாக நடத்த வேண்டும்! - கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

வாக்குப் பதிவு மையங்களில் அடிப்படை வசதிகளை செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

