அதன்படி, திட்டக்குடி தொகுதிக்கு ஸ்ரீஞானகுரு வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் தொகுதிக்கு ஜெயப்பிரியா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, நெய்வேலி மற்றும் பண்ருட்டி தொகுதிக்கு பண்ருட்டி ஜான்டூவி தொடக்கப் பள்ளி, கடலூா் தொகுதிக்கு மஞ்சக்குப்பம் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, புவனகிரி தொகுதிக்கு புவனகிரி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் தொகுதிக்கு சிதம்பரம் அண்ணாமலை நகா், கே.ஆா்.எம். டெக்பாா்க், காட்டுமன்னாா்கோவில் தொகுதிக்கு காட்டுமன்னாா்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் வாக்குச் சாவடி பணியில் ஈடுபடவுள்ள வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலா் - 1, வாக்குப் பதிவு அலுவலா் - 2, வாக்குப் பதிவு அலுவலா் - 3 என மொத்தம் 12,432 அலுவலா்களுக்கு முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது.