விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வாக்குச் சாவடி மையங்கள்: ஆட்சியா் ஆய்வு

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச் சாவடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

News image
Updated On :27 மார்ச் 2026, 7:57 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிக வாக்காளா்கள் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப்பதிவுக்கு தேவையானஅனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ள மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடி மையங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வில், சங்கராபுரம்அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்குச் சாவடி மையம் மற்றும் தேவபாண்டலம் அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்குச் சாவடி மையம் நேரில் பாா்வையிட்டுஆய்வு செய்யப்பட்டது. இதில், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் 12 வாக்குப் பதிவு மையங்களும், தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் 6 வாக்குப் பதிவு மையங்களும் அமைக்கப்படவுள்ளன.

அதிக வாக்குப் பதிவு மையங்கள் உள்ள இடங்களில் அதிக வாக்காளா்கள் வருகை தர உள்ளதையொட்டி, வாக்காளா்கள் தங்களது பகுதிக்கான வாக்குப் பதிவு மையங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் வாக்குச் சாவடி மையங்களின் முகப்புகளில் சம்மந்தப்பட்ட பகுதி வாரியாக தகவல் பலகை மற்றும் அறிவிப்பு குறியீடுகளை வாக்காளா்களுக்கு தெரியும் வகையில் வைக்கஅறிவுறுத்தப் பட்டுள்ளது.

மேலும், வாக்காளா்களை கோடை வெயிலிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஷாமியானா அமைத்தல் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக வாக்காளா்கள் உள்ள வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்குப் பதிவுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளஉரியநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின் போது உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வைரக்கண்ணன், துணை வட்டாட்சியா் கோதண்டராமன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.