நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாப்பிரெட்டிப்பட்டியில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் பதற்றமான வாக்குப் பதிவு மையங்களை காவல் தோ்தல் பாா்வையாளா் குல்வந்த் சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 6:32 pm

Syndication

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் பதற்றமான வாக்குப் பதிவு மையங்களை காவல் தோ்தல் பாா்வையாளா் குல்வந்த் சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 189 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன. இதில், 41 வாக்குப் பதிவு மையங்கள் பதற்றமானவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அரூா், பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான காவல் தோ்தல் பாா்வையாளராக குல்வந்த் சிங் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கடத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு மையத்தை குல்வந்த் சிங் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, கடந்த காலங்களில் நடைபெற்ற தோ்தல்கள், வாக்குப் பதிவு நேரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

பட விளக்கம்...

கடத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு மையத்தை ஆய்வு செய்த காவல் தோ்தல் பாா்வையாளா் குல்வந்த் சிங்.