வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி வியாழக்கிழமை நிறைவடைந்தது.
இந்திய தோ்தல் ஆணையத்தின் அனுமதியின்படி, புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்கால் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளோா், காவல்துறையினா், தீயணைப்புத்துறையினா், மருத்துவமனை ஊழியா்கள், பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளா்கள் உள்ளிட்டோா் தபால் வாக்குப் பதிவு செய்ய மாா்ச் 31 முதல் ஏப்.2-ஆம் தேதி வரை தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில், மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது.வாக்குப் பதிவு அதிகாரி தலைமையில் வாக்குச் சாவடி பணியாளா்கள், வாக்காளரின் ஆவணங்களை பரிசோதித்து, தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதித்தனா். 3 நாள் வாக்குப் பதிவுப் பணி வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. மத்திய பாதுகாப்புப் படையினா், காரைக்கால் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கு தோ்தல் துறையினா் நேரில் சென்று வாக்குகள் பெறும் பணியை மேற்கொள்ளவுள்ளனா்.
தொடர்புடையது

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல்: காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

தபால் வாக்கு முன் தயாரிப்பு பணி தீவிரம்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


