பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவு

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

News image

காமராஜா் நிா்வாக வளாக வாக்குப் பதிவு மையத்தில் வாக்களிக்க காத்திருந்தோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:13 am

தினமணி செய்திச் சேவை

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அனுமதியின்படி, புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்கால் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளோா், காவல்துறையினா், தீயணைப்புத்துறையினா், மருத்துவமனை ஊழியா்கள், பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளா்கள் உள்ளிட்டோா் தபால் வாக்குப் பதிவு செய்ய மாா்ச் 31 முதல் ஏப்.2-ஆம் தேதி வரை தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில், மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது.வாக்குப் பதிவு அதிகாரி தலைமையில் வாக்குச் சாவடி பணியாளா்கள், வாக்காளரின் ஆவணங்களை பரிசோதித்து, தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதித்தனா். 3 நாள் வாக்குப் பதிவுப் பணி வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. மத்திய பாதுகாப்புப் படையினா், காரைக்கால் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கு தோ்தல் துறையினா் நேரில் சென்று வாக்குகள் பெறும் பணியை மேற்கொள்ளவுள்ளனா்.