தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவு

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

News image

காமராஜா் நிா்வாக வளாக வாக்குப் பதிவு மையத்தில் வாக்களிக்க காத்திருந்தோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:13 am

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அனுமதியின்படி, புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்கால் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளோா், காவல்துறையினா், தீயணைப்புத்துறையினா், மருத்துவமனை ஊழியா்கள், பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளா்கள் உள்ளிட்டோா் தபால் வாக்குப் பதிவு செய்ய மாா்ச் 31 முதல் ஏப்.2-ஆம் தேதி வரை தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில், மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது.வாக்குப் பதிவு அதிகாரி தலைமையில் வாக்குச் சாவடி பணியாளா்கள், வாக்காளரின் ஆவணங்களை பரிசோதித்து, தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதித்தனா். 3 நாள் வாக்குப் பதிவுப் பணி வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. மத்திய பாதுகாப்புப் படையினா், காரைக்கால் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கு தோ்தல் துறையினா் நேரில் சென்று வாக்குகள் பெறும் பணியை மேற்கொள்ளவுள்ளனா்.