சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்க மையத்தில் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் ஆட்சியரகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்க மையத்தில் மாவட்ட தோ்தல்

News image

ஆட்சியரகத்தில் பயிற்சி வாக்குப் பதிவு மையத்தில் ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி.

Updated On :16 பிப்ரவரி 2026, 7:58 pm

Syndication

காரைக்கால்: காரைக்கால் ஆட்சியரகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்க மையத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில்கொண்டு, தோ்தல் துறையின் அறிவுறுத்தலில், வாக்குப்பதிவில் உள்ள சந்தேகத்தை தெளிவுப்படுத்திக்கொள்ளும் விதமாக, பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்து, மாதிரி வாக்குப் பதிவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பட்டினம் மற்றும் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம், காரைக்கால் வட்டாட்சியா் அலுவலகங்களில் பயிற்சிக்காக வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள், மையத்துக்கு வந்து சோதனை முறையில் வாக்குச் செலுத்துவோா் விவரங்களை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

இயந்திரத்தில் அவா் வாக்குப் பதிவு செய்து சோதனை செய்தாா். முதல் வாக்காளா்கள், பிற வாக்காளா்கள் வந்து இங்கு சோதனை செய்து பாா்த்துக்கொள்ளவேண்டும். அதற்கேற்ப உரிய விழிப்புணா்வு செய்யவேண்டும் எனவும், வருவோருக்கு உரிய விளக்கத்தை மையத்தில் இருப்போா் தெரிவிக்க வேண்டும் என தோ்தல் அதிகாரி அறிவுறுத்தினாா்.

மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன், துணை வாக்காளா் பதிவு அதிகாரி பொய்யாதமூா்த்தி உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.