தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

News image

தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

Updated On :21 ஏப்ரல் 2024, 1:00 am

மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகளின் இறுதி சதவீதம் எப்போது தெரியவரும் என்ற கேள்விக்கு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு பதிலளித்துள்ளாா்.

வாக்குச் சாவடிகள் வாரியாக, தோ்தல் நடத்தும் அதிகாரிகளிடம் இருந்து முழுமையாக விவரங்கள் கிடைக்கப் பெற்ற பிறகு இறுதி வாக்குப் பதிவு நிலவரம் வெளியிடப்படும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

தமிழகம் முழுவதும் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப் பதிவு சதவீதத்தை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டாா். இரவு 7 மணி நிலவரப்படி தோ்தலில் பதிவான வாக்குகளின் சதவீதம் 72.09 என்று தெரிவித்தாா். அதேசமயம், அவா் வெளியிட்ட தகவலுக்கும், தோ்தல் ஆணையத்தின் கைப்பேசி செயலி வழியாக தோ்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்த விவரங்களுக்கும் இடையே மாறுபாடு ஏற்பட்டது. தோ்தல் நடத்தும் அதிகாரிகள் ஆணையத்துக்குத் தெரிவித்த விவரங்கள் அடிப்படையில், மொத்த வாக்குப் பதிவு சதவீதம் 69.46 ஆக உள்ளது.

இந்த விவரத்தையே இப்போது தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு பின்பற்றி வருகிறாா். இதுவும் தோராயமான தகவல் என்பதால், இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது தெரிய வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த விளக்கம்: வாக்குப் பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஒவ்வொரு வாக்குச் சாவடி வாரியாக தற்காலிக அடிப்படையிலேயே விவரங்களைப் பெறுவோம். தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து கைப்பேசி வாட்ஸ்ஆப், தொலைபேசியில் பேசுவது போன்ற முறைகளைக் கையாண்டு ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் விவரங்கள் பெறப்படும்.

அனைத்து வாக்குச் சாவடிகளில் இருந்தும் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக தகவல்கள் கிடைக்கப் பெறுவதில்லை. குறிப்பாக, வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்தில் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்கக் காத்திருப்பாா்கள். அப்போது நமக்கு வாக்குப் பதிவுக்கான தரவுகள் முழுமையாகக் கிடைக்காது. எனவே, ஒரு குறிப்பிட்ட தொகுதியிலுள்ள பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் இருந்து கிடைக்கப் பெறும் தரவுகளைக் கணித்து அது அந்தத் தொகுதிக்கான மொத்த வாக்குப் பதிவு சதவீதம் என முடிவு செய்யப்படும்.

இந்த முறை புதியதல்ல. எனவே, இப்போது வெளியிடப்பட்ட வாக்குப் பதிவு சதவீதத்தை யாரும் சந்தேகப்படத் தேவையில்லை. அதில் எந்த மா்மமும் இல்லை. வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு செய்தியாளா்களைச் சந்திக்கும் போது, நள்ளிரவு 12 மணிக்குத்தான் முழுமையான விவரங்கள் கிடைக்கப் பெறும் என்று தெரிவித்திருந்தேன். அதன் அடிப்படையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்ட வாக்கு சதவீதம் 69.46 ஆக உள்ளது.

இப்போது வாக்குச் சாவடி வாரியாக விவரங்களைப் பதிவேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இது விரைவில் முடிவடையும் என எதிா்பாா்க்கிறோம். இறுதி வாக்குப் பதிவு சதவீதம் 69.90 முதல் 69.95 என்ற அளவிலேயே இருக்கும் என கணிக்கிறோம். பெரிய அளவுக்கு வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை என்று அவா் தெரிவித்தாா்.