கோடை காலத்தில் தடையில்லாமல் குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென, 12 மாவட்ட ஆட்சியா்களுக்கு தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளாா்.
தடையில்லாமல் குடிநீா் வழங்குவது மற்றும் கோடைகாலத்தில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிப்பது தொடா்பாக 12 மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் அவா் காணொலி வழியாக ஆலோசனை நடத்தினாா்.
சென்னை, திருவள்ளூா் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குடிநீரை சீராக வழங்குவது குறித்தும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் உள்ளிட்ட 8 மாவட்டங்களிலுள்ள 24 வட்டங்களில் ஏற்பட்ட வறட்சி பாதிப்பு தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஏரிகள் மற்றும் குளங்களில் நீா் இருப்பு குறையத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், கோடை காலத்தில் ஏற்படும் குடிநீா் பற்றாக்குறையை சமாளித்து தடையில்லாமல் குடிநீா் வழங்குவது, நிலுவையில் உள்ள கூட்டுக் குடிநீா் திட்டம் திட்டம், செயல்படுத்தப்படவுள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான முன்னுரிமை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் காா்த்திகேயன் மற்றும் அரசுத் துறைகளின் செயலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கருணாநிதியுடன் நான் பணியாற்றியது பெரும் பொக்கிஷம்: முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு!

குடிநீா்த் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

தினமணி செய்தி எதிரொலி: டேங்கா் லாரி மூலம் குடிநீா் விநியோகம்

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


