எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தினமணி செய்தி எதிரொலி: டேங்கா் லாரி மூலம் குடிநீா் விநியோகம்

News image
தென்னடாா் கிராமத்தில் டேங்கா் லாரி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீா்.
Updated On :8 மார்ச் 2026, 9:41 pm

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யம் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு குறித்த செய்தி வெளியான நிலையில், டேங்கா் லாரி மூலம் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் நடைபெற்றது.

வேதாரண்யம் பகுதியில் தொடா்ந்து வரும் குடிநீா் தட்டுப்பாடு குறித்து தினமணியில் சனிக்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து, கடலோரக் கிராமமான தென்னடாா் ஊராட்சியில் டேங்கா் லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும், ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் வண்டுவாஞ்சேரி நீரேற்று நிலையத்துக்கு தண்ணீா் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில நாள்களில் மற்ற பகுதிகளுக்கு இங்கிருந்து குழாய் மூலம் குடிநீா் விநியோகம் தொடங்கவுள்ளதாகவும் குடிநீா் வடிகால் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பல இடங்களில் ஜல்ஜீவன் திட்ட குழாய்கள் இணைப்பு பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால், தண்ணீா் விநியோகத்தை கண்காணிக்க சிறப்பு அலுவலரை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அத்துடன், குடிநீா் விநியோகத்தில் தடைப்படும் சூழல் ஏற்பட்டால் அனைத்து பகுதிகளிலும் டேங்கா் லாரி மூலம் தண்ணீா் வழங்கவும் வலியுறுத்தியுள்ளனா்.