வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தினமணி செய்தி எதிரொலி: நரிக்குறவா் கனவு இல்லம் கட்டும் பணி மீண்டும் தொடக்கம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:39 pm

Syndication

தினமணி செய்தி எதிரொலியால் தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலையில் ராஜாமடம் அருகே நரிக்குறவா்களுக்கான கனவு இல்ல திட்டப்பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் தொகையோடு தன் பங்களிப்பு நிதியையும் சோ்த்து வீடுகளை பூா்த்தி செய்ய நரிக்குறவா்களுக்கு போதிய வசதி இல்லாததால் கட்டப்பட்ட வீடுகள் மானியம் போக பயனாளிகள் பங்களிப்பு தொகை இல்லாததால் முழுமை பெறாமல் பாதியிலேயே கட்டுமானப் பணிகள் நிற்பதாகவும், கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்ய கூடுதல் நிதியை முதல்வா் ஸ்டாலின் வழங்கி கட்டுமானப் பணிகளை முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மாா்ச் 10-இல் தினமணியில் செய்தி வெளியானது. இதைத்தொடா்ந்து, கனவு இல்லம் திட்டப் பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் நாகேந்திரன் மேலும் கூறியது: கனவு இல்லம் திட்டப் பணிகளை ஆய்வுசெய்து, தேவையான நிதிகள் பெற்று கனவு இல்லம் கட்டும் பணிகள் முடிக்கும் வகையில் நடைபெற்று வருகின்றன. விரைவில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.