குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்


உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்ற குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை, கேடயத்தை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்தியரும், சென்னையைச் சோ்ந்தவருமான குகேஷ் சாம்பியன் ஆனாா். இதன்மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்ற அவா், அந்த சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்ற இளம் போட்டியாளா் (17 வயது) என்ற புதிய சாதனை படைத்தாா்.
இதற்கு முன்னா், ரஷிய நட்சத்திரமான கேரி கேஸ்பரோவ் 1984-இல் தனது 22-ஆவது வயதில் உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றதே குறைந்தபட்ச வயதாக இருந்தது. குகேஷ் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை முறியடித்திருக்கிறாா். தற்போது, நடப்பாண்டின் கடைசியில் நடைபெறவிருக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், நடப்பு சாம்பியனாக இருக்கும் சீனாவின் டிங் லிரெனுடன் மோதவுள்ளாா் குகேஷ்.
உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதிபெற்ற 2-ஆவது இந்தியா் ஆவார். இதற்கு முன்னா், 5 முறை உலக சாம்பியனும், சென்னையைச் சோ்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த் 2014-இல் கேண்டிடேட்ஸ் செஸ்ஸில் வென்று உலக சாம்பியன்ஷிப்புக்கு முன்னேறியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து குகேஷ் வாழ்த்து பெற்றார்.
அப்போது, குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை, கேடயத்தை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...