கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

News image
Updated On :28 ஏப்ரல் 2024, 6:34 am

DIN

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்ற குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை, கேடயத்தை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்தியரும், சென்னையைச் சோ்ந்தவருமான குகேஷ் சாம்பியன் ஆனாா். இதன்மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்ற அவா், அந்த சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்ற இளம் போட்டியாளா் (17 வயது) என்ற புதிய சாதனை படைத்தாா்.

இதற்கு முன்னா், ரஷிய நட்சத்திரமான கேரி கேஸ்பரோவ் 1984-இல் தனது 22-ஆவது வயதில் உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றதே குறைந்தபட்ச வயதாக இருந்தது. குகேஷ் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை முறியடித்திருக்கிறாா். தற்போது, நடப்பாண்டின் கடைசியில் நடைபெறவிருக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், நடப்பு சாம்பியனாக இருக்கும் சீனாவின் டிங் லிரெனுடன் மோதவுள்ளாா் குகேஷ்.

உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதிபெற்ற 2-ஆவது இந்தியா் ஆவார். இதற்கு முன்னா், 5 முறை உலக சாம்பியனும், சென்னையைச் சோ்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த் 2014-இல் கேண்டிடேட்ஸ் செஸ்ஸில் வென்று உலக சாம்பியன்ஷிப்புக்கு முன்னேறியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து குகேஷ் வாழ்த்து பெற்றார்.

அப்போது, குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை, கேடயத்தை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.