விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

News image
மதுரை விமான நிலையம்.
Updated On :29 ஏப்ரல் 2024, 6:27 am

DIN

மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளிக்க வந்த பாஜக நிர்வாகியை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வெயிலின் தாக்கம் சென்னையில் அதிகம் உள்ள நிலையில், முதல்வா் ஸ்டாலின் குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு திங்கள்கிழமை செல்ல உள்ளாா். அதற்காக, ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து திங்கள்கிழமை காலை புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்குச் சென்றார்.

பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்குச் சென்றடைந்தார். அங்கிருந்து காா் மூலம் கொடைக்கானலுக்குச் செல்கிறாா். மே 4-ஆம் தேதி வரை அவா் அங்கு தங்கி இருப்பாா் எனத் தெரிகிறது.

இதனிடையே மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளிக்க வந்த பாஜக செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டியை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் அவர் வந்ததால் விமான நிலையத்தில் பரபரபபு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.