நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கல்வேலிபட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் திருமணம், அரசியல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மேடை அலங்காரம் செய்வது உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார்.
இவர் நத்தம் மீனாட்சிபுரத்தில் குடோன் அமைத்து, விழா காலங்களில் பயன்படுத்தப்படும் மைக் செட்டுகள், டியூப் லைட்டுகள், சீரியல் லைட்டுகள் மற்றும் தளவாடப் பொருள்கள் ஆகியவற்றை கடையில் வைத்திருந்தார். நள்ளிரவு வரை இருந்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில், திடீரென குடோனில் தீப்பற்றியது. இதனால் குடோனில் இருந்த ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்