சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சென்னைவாசிகள் கவனத்திற்கு: கனமழை கொட்டித் தீர்க்கும்! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

சென்னையில் கனமழை கொட்டித் தீர்க்கும் -தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான்

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 1:20 pm

DIN

சென்னையில் பரவலாக கனமழை கொட்டித் தீர்க்கும் என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னை மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் அடுத்த 10 நாள்களுக்கு தீவிர மழைக்கு வாய்ப்பிருப்பதாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெப்பச்சலனத்தால் தமிழக உள் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் அடுத்த இரு வாரங்களுக்கு மழை பெய்யக்கூடும். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பகல் வேளையில் வெயில் வாட்டினாலும், மாலை வேளையில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று(ஆக. 4) பகல் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் மதுரவாயல், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், ஐயப்பந்தாங்கல், வானகரம் உள்பட மாநகரின் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.