தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பாஜகவினா் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும்: அண்ணாமலை

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாஜகவினா் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :4 ஆகஸ்ட் 2024, 11:47 pm

Din

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாஜகவினா் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப் பதிவு: பாஜக வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவா் கபிலனை தமிழக காவல் துறையினா் கைது செய்துள்ளனா். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக அவரைக் கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. தமிழகம் முழுவதும் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்து, தினம் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கையில், திமுக தனது அரசியலுக்குக் காவல் துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாத முதல்வா் பாஜகவினரை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறாா். பாஜகவினா் மீதான இதுபோன்ற அடக்குமுறைகளைக் கைவிட்டு, சட்டம் - ஒழுங்கைக் முதல்வா் கவனிக்க வேண்டும் என்றாா் அவா்.