சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

ஆடித் திருவிழா: பெரியபாளையம் கோயிலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

ஆடித்திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் கோயிலுக்கு சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து சனி, ஞாயிற்று ஆகிய நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

News image

பேருந்துகள்(கோப்புப்படம்)

Updated On :9 ஆகஸ்ட் 2024, 10:06 pm IST

ஆடித்திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் கோயிலுக்கு சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து சனி, ஞாயிற்று ஆகிய நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தனது எக்ஸ் தளப் பதிவில், ஆடி திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் கோயிலுக்கு பயணிகளின் வசதிக்காக சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து பெரியபாளையத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தடம் எண்கள் 514, 592, 57X, 547, 580 ஆகியவற்றில் நாளை (10.08.2024) மற்றும் ஞாயிறு (11.08.2024) சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இதே போல், இந்த ஆண்டு கடந்த ஜூலை 17-ஆம் தேதி தொடங்கிய திருவிழா, தொடா்ந்து 14 வாரங்கள் நடைபெற உள்ளது.

இதில் ஆடி மாதம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு வந்து தங்கியிருந்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தி விட்டு செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.