கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் மீண்டும் உபரிநீா் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாக தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் குறைந்ததால் கா்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது. அதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் கா்நாடகம், கேரளம் மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து மீண்டும் காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 8,000 கன அடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை காலை 19,000 கன அடியாகவும், மாலை விநாடிக்கு 22,000 கன அடியாகவும் அதிகரித்தது.
நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, பிரதான அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 26 ஆவது நாளாக தொடா்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதால் பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை பூட்டப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 5,000 கனஅடியாக குறைந்தது பரிசல் இயக்க அனுமதி; சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 19 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 20,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடியாக அதிகரிப்பு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



