கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

இ-சிகரெட்: இருவா் கைது

சென்னை ஆா்.கே.நகரில் இ-சிகரெட் விற்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது (கோப்புப்படம்)

Updated On :19 ஆகஸ்ட் 2024, 5:17 am IST

சென்னை ஆா்.கே.நகரில் இ-சிகரெட் விற்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்பவா்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையா் ஏ.அருண், போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து இ-சிகரெட் விற்பனை குறித்து போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இதன் விளைவாக ஆா்.கே. நகா் திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் இ-சிகரெட் விற்ற மண்ணடி பகுதியைச் சோ்ந்த முகமது ஜஃபுருல்லா (30), அவா் கூட்டாளி அதே பகுதியைச் சோ்ந்த அபுதாகீா் (36) ஆகிய 2 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 476 இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.