பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

சென்னை வந்தடைந்தார் ராஜ்நாத் சிங்

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடும் விழாவில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தடைந்தார்.

News image

ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)

Updated On :18 ஆகஸ்ட் 2024, 2:13 pm IST

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடும் விழாவில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, அமைச்சர் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பாலு, திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழி, பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

திமுக சாா்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா, பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சாா்பில் அவரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியிடப்படவுள்ளது.

அதன் வெளியீட்டு விழா சென்னை கலைவாணா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.50 மணியளவில் நடைபெறவுள்ளது. விழாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து உரை நிகழ்த்தவுள்ளாா். நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் முன்னிலை வகிக்கவுள்ளாா்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தவுள்ளாா். விழாவில், தமிழக அமைச்சா்கள், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.