நாகா்கோவில்-தாம்பரம் ரயில் சேவை நீட்டிப்பு
நாகா்கோவில்-தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை நவம்பா் வரை நீட்டிக்கப்படவுள்ளது.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 6:41 pm

நாகா்கோவில்-தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை நவம்பா் வரை நீட்டிக்கப்படவுள்ளது.
தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகா்கோவிலிலிருந்து தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11.15 மணிக்கும், மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து திங்கள்கிழமை தோறும் பிற்பகல் 3.30 மணிக்கும் சிறப்பு ரயில் (எண் 06012/06011) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து நவ.24 வரை இயக்கப்படும்.
இந்த ரயில் வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...