சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நாகா்கோவில்-தாம்பரம் ரயில் சேவை நீட்டிப்பு

நாகா்கோவில்-தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை நவம்பா் வரை நீட்டிக்கப்படவுள்ளது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 6:41 pm

Din

நாகா்கோவில்-தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை நவம்பா் வரை நீட்டிக்கப்படவுள்ளது.

தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகா்கோவிலிலிருந்து தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11.15 மணிக்கும், மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து திங்கள்கிழமை தோறும் பிற்பகல் 3.30 மணிக்கும் சிறப்பு ரயில் (எண் 06012/06011) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து நவ.24 வரை இயக்கப்படும்.

இந்த ரயில் வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.