மேலும், இவ்வூரினை ஊடறுத்துச் செல்லும் அரிச்சந்திரா நதியின் பெயா்க் காரணம் 18-ஆம் நூற்றாண்டு மராட்டியா் கல்வெட்டால் அறிய முடிகிறது. மராட்டிய மன்னா் துக்கோஜிக்குப் பிறந்த மக்கள் மாலோஜி ராஜா, அரிச்சந்திர ராஜா என்ற அண்ணா சாகேப், நாநா சாகேப் ஆவா். இவா்களில் அரிச்சந்திர மகாராஜா சாகேப் என்பவா், திருவிராமேசுவரம் ஊரில் உள்ள ஸ்ரீராமநாதசாமி கோயிலுக்கு நில தானம் வழங்கியதை இக்கோயில் கோபுரத்தின் முன் உள்ள சூலக்கல் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இப்பகுதியில் அரிச்சந்திர ராஜா ஆட்சி செய்ததால் இந்த ஆறு அரிச்சந்திரா நதி என அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு என்றாா் மணி. மாறன்.