மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருவண்ணாமலையில் மீண்டும் மண் சரிவு!

கார்த்திகை தீபம் ஏற்றப்படும் கொப்பரை வைக்கும் இடத்தில் மண் சரிவு..

News image

மண் சரிவு

Updated On :7 டிசம்பர் 2024, 9:44 am

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் கொப்பரை வைக்கும் இடத்தில் 400 அடிக்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலையில் சனிக்கிழமை காலை தொடங்கி ஞாயிறு இரவு வரை இடைவிடாமல் தொடர் மழை பெய்தது.

கடந்த ஞாயிறன்று மாலை 5 மணிக்கு திடீரென மகா தீபம் ஏற்றும் மலையின் 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் சேதமடைந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

இதனிடையே வரும 13ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், கார்த்திகை தீபம் ஏற்றப்படும் கொப்பரை வைக்கப்படும் இடத்தில், அரைமலை பகுதியிலிருந்து சுமார் 600 அடிக்கு கீழ் மீண்டும் மற்றொரு சரிவு ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மண் சரிவு தொடர்பாக மலைக்குச் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.