தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது பற்றி..

News image
காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.- IMD
Updated On :7 டிசம்பர் 2024, 7:25 am

DIN

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது டிச.12-ஆம் தேதிக்கு மேல் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில், அதாவது அந்தமானுக்கு தெற்கே, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இது, மேலும் வலுவடைந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் சனிக்கிழமை (டிச.7) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, டிச.12 -க்கு மேல் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் டிச.12 வரை தமிழகத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், டிச.11, 12 ஆகிய தேதிகளில் கடலூர் தொடங்கி ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறுமா?

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதேசமயம், புயலாக உருவாவதற்கு சாதகமான சூழல்கள் தற்போதுவரை இல்லை.

இந்த புயல் சின்னத்தால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் டிச.11 முதல் டிச.14 வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியாா் வானிலை ஆய்வாளா்கள் கணித்துள்ளனா்.

ஃபென்ஜால் பாதையில் கடந்து செல்லும்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். ஆனால் புயலாக மாற சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளதால் ஃபென்ஜால் புயலின் பாதையில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது புயலாக மாறுமா? அதற்கான வாய்ப்புகள் அமையுமா? அப்படியே புயலாக மாறினாலும் சென்னையில் கரையைக் கடக்குமா என்று பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.