ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

டங்ஸ்டன் சுரங்கமா? அனுமதித்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன்: மு.க. ஸ்டாலின்

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கும் நிலை வந்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன் என்று மு.க. ஸ்டாலின்

News image

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - Center-Center-Chennai

Updated On :9 டிசம்பர் 2024, 1:16 pm IST

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்கும் நிலை வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மதுரை மாவட்டம் அரிட்டப்பாட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தனித் தீர்மானம் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் உரையாற்றினர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரைக்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தே தீருவோம். ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஒருவேளை, அனுமதி தரும் நிலை வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாக பதிலளித்தார்.

பேரவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீங்கள் கடிதம் எழுதியதாகக் கூறுகிறார்கள். ஆனால், மத்திய அரசு தரப்பில் கடிதம் வரவில்லை என்று கூறுகிறார்களே என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறோம். கடிதம் எழுதும்போதெல்லாம் அது தொடர்பான அறிக்கைகள் செய்தித்தாளில் வெளியிடுகிறோம். பிறகு தெரியவில்லை தெரியவில்லை என்று கேட்டால் எனக்குப் புரியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதம் பற்றிய தகவல்கள்தான் தெரியவரவில்லை என்று கூறியதாக பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், நான் முதல்வராக பதவியில் இருக்கும்வரை மத்திய அரசு இந்த திட்டத்தைக் கொண்டு வர முடியாது. கொண்டு வந்தாலும் நிச்சயமாக தடுத்தே தீருவோம். நான் தமிழக முதல்வராக இருக்கும்வரையிலே இந்த திட்டத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம், அனுமதிக்க மாட்டோம், மத்திய அரசு சுரங்கத்தை ஏலம் விட்டாலும் தமிழக அரசு அதற்கு அனுமதிக்காது என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்கும் நிலை வந்தால் பதவியில் இருக்க மாட்டேன் என்று ஸ்டாலின் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.