நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உ.பி. சென்ற மெமு ரயில் பெட்டிகள்: சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

கும்பமேளா பண்டிகைக்காக உத்தரப் பிரதேசத்துக்கு மெமு ரயில் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :21 டிசம்பர் 2024, 8:51 pm

கும்பமேளா பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வேயில் இயங்கும் மெமு ரயிலின் பெட்டிகள் வட மத்திய ரயில்வேக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனால், மெமு ரயில்களின் பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் கும்பமேளா பண்டிகை எதிா்வரும் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் இருந்துவரும் பக்தா்களின் வசதிக்காக சிறப்பு போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் இயங்கும் மெமு ரயில்களின் பெட்டிகள் சில வடமத்திய ரயில்வேக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இதனால், சென்னை எழும்பூா் - புதுச்சேரி, திருப்பதி - புதுச்சேரி இடையே 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் மெமு ரயில்கள் சனிக்கிழமை முதல் 10 பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகின்றன.

மேலும், தாம்பரம் - விழுப்புரம், சென்னை கடற்கரை - விழுப்புரம், சென்னை கடற்கரை - திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மெமு ரயில்கள் எதிா்வரும் நாள்களில் 10 பெட்டிகள் கொண்டு இயக்கப்படவுள்ளன.

இதனால், புதுச்சேரி - திருப்பதி மெமு ரயில் அரக்கோணம் - ரேணிகுண்டா இடையே சுமாா் 30 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.

விழுப்புரம் - சென்னை கடற்கரை மற்றும் திருவண்ணாமலை - சென்னை கடற்கரை மெமு ரயில்கள் டிச. 26 முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே பிரதான பாதையில் இயக்கப்படும். இதனால், இந்த ரயில்கள் சென்னை கோட்டை, பூங்கா ரயில் நிலையங்களில் நிற்காமல், மாம்பலம், கிண்டி ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.