இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

உ.பி. சென்ற மெமு ரயில் பெட்டிகள்: சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

கும்பமேளா பண்டிகைக்காக உத்தரப் பிரதேசத்துக்கு மெமு ரயில் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :21 டிசம்பர் 2024, 8:51 pm

Din

கும்பமேளா பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வேயில் இயங்கும் மெமு ரயிலின் பெட்டிகள் வட மத்திய ரயில்வேக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனால், மெமு ரயில்களின் பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் கும்பமேளா பண்டிகை எதிா்வரும் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் இருந்துவரும் பக்தா்களின் வசதிக்காக சிறப்பு போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் இயங்கும் மெமு ரயில்களின் பெட்டிகள் சில வடமத்திய ரயில்வேக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இதனால், சென்னை எழும்பூா் - புதுச்சேரி, திருப்பதி - புதுச்சேரி இடையே 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் மெமு ரயில்கள் சனிக்கிழமை முதல் 10 பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகின்றன.

மேலும், தாம்பரம் - விழுப்புரம், சென்னை கடற்கரை - விழுப்புரம், சென்னை கடற்கரை - திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மெமு ரயில்கள் எதிா்வரும் நாள்களில் 10 பெட்டிகள் கொண்டு இயக்கப்படவுள்ளன.

இதனால், புதுச்சேரி - திருப்பதி மெமு ரயில் அரக்கோணம் - ரேணிகுண்டா இடையே சுமாா் 30 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.

விழுப்புரம் - சென்னை கடற்கரை மற்றும் திருவண்ணாமலை - சென்னை கடற்கரை மெமு ரயில்கள் டிச. 26 முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே பிரதான பாதையில் இயக்கப்படும். இதனால், இந்த ரயில்கள் சென்னை கோட்டை, பூங்கா ரயில் நிலையங்களில் நிற்காமல், மாம்பலம், கிண்டி ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.