ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: மறுஆய்வு மனு தள்ளுபடி

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

News image
செந்தில் பாலாஜி- கோப்புப் படம்
Updated On :22 டிசம்பர் 2024, 12:12 am

Din

தமிழக மின்சாரத்துறை அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையினா் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை கைது செய்தனா். இதையடுத்து, பல கட்ட விசாரணைக்குப் பின்னா் கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜாா்ஜ் மாஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த 17-ஆம் தேதி விசாரித்தது. அதன் பின்னா் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு சனிக்கிழமை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில், ‘செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்வதற்கான சூழல் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அந்த உத்தரவில் எவ்வித தவறுகளும் இல்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும், அதை பொதுவெளியில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.