கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

'மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதியா? மாநிலப் பட்டியலில் கல்வி வேண்டும்' - அன்பில் மகேஸ்

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

News image

அன்பில் மகேஸ் பொய்யாமொழி - கோப்புப்படம்.

Updated On :23 டிசம்பர் 2024, 7:25 am

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'மத்திய அரசிற்கு முன்மாதிரியாக கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் மத்திய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.

பல்வேறு வகைகளிலும் கல்வியில் சாதனை புரியும் நமது மாணவச் செல்வங்களையும், ஆசிரியப் பெருமக்களையும் மத்திய அரசு ஏமாற்றி வருகின்றது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எங்கள் பிள்ளைகளையும் ஆசிரியப் பெருமக்களையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மாணவர்களுக்கு என்ன மாதிரியான அறிவுசார் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு எடுத்துக் கொள்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ்,

'திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் தமிழக எம்.பி.க்களுடன் மத்திய கல்வித் துறை அமைச்சரை சென்று சந்தித்தோம்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள், அரை மணி நேரத்தில் நிதியை விடுவிக்கிறோம் என்று கூறினார். இதற்கு என்ன அர்த்தம். தமிழக பள்ளிக்கல்வித் துறை சாதனைகளை, செயல்பாடுகளை நாங்கள் பணிவான முறையில் எடுத்துரைத்தோம்.

அதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'நான் ஹிந்தி பேசாத ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவன், நானே இதைச் சொல்கிறேன், புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று கூறினார்.

அப்போது நான் கூறினேன், எங்கள் மாநிலத்திற்கென்று சில உணர்வுகள் இருக்கின்றன, அண்ணா காலத்திலிருந்து நாங்கள் இருமொழிக் கொள்கையை பின்பற்றுகிறோம். எங்கள் குழந்தைகள் இன்று உலகளவில் சென்று வருகிறார்கள். நுழைவுத் தேர்வு குறித்து பள்ளியிலேயே பயிற்சி அளிக்கிறோம். அதையெல்லாம் ஒப்பிட்டு பாருங்கள். பள்ளிக்கல்வித் துறையில் பல தொழில்நுட்பங்களை கொண்டுவந்திருக்கிறோம் என்று கூறினேன்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.