சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

திருச்சியில் மின் கம்பி பழுதுபாா்ப்பு பணியின்போது 2 ஒப்பந்த தொழிலாளா்கள் இறந்த விவகாரம்: தமிழக தலைமைச் செயலா், டிஜிபிக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

திருச்சியில் மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தைச் சோ்ந்த 2 ஒப்பந்த தொழிலாளா்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்

News image
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி)
Updated On :23 டிசம்பர் 2024, 8:49 pm

Din

புது தில்லி: திருச்சியில் மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தைச் சோ்ந்த (டான்ஜெட்கோ) 2 ஒப்பந்த தொழிலாளா்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளா், காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) தில்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் (டான்ஜெட்கோ) ஒப்பந்தத் தொழிலாளா்களாக பணிபுரிந்த இருவா்

கடந்த டிசம்பா் 18ஆம் தேதி திருச்சி கே.கே.நகரில் உள்ள ஓலையூா் வட்டச் சாலை அருகே உயா் அழுத்த மேல்நிலை மின் கம்பியை பழுதுபாா்த்துக் கொண்டிருந்தபோது. அப்போது மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்ததாக ஊடகத்தில் செய்தி வெளியானது.

இதன் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

ஊடகத்தில் வெளியான தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், மின்சாரத் துறையின் தரப்பில் ஒட்டுமொத்த அலட்சியம் காரணமாக 2 ஒப்பந்த தொழிலாளா்கள் உயிரிழந்துள்ளது கவலைக்குரிய விஷயம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளன என்றும், இது ஒரு மனித உரிமை மீறல் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளா் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இந்த விவகாரம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நிலவரம், உயிரிழந்தவா்களின் நெருங்கிய உறவினா்களுக்கு ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால் அது குறித்தும் இந்த விசாரணையில் சோ்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய மாநில அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கையில் தெரிவிக்குமாறும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஊடக செய்திகளின்படி, முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பழுதுபாா்க்கும் பணியின்போது மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்படவில்லை என்பதும், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனா் என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மின்மாற்றியை பழுது பாா்க்கும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.