பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தூத்துக்குடி: மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர்!

தூத்துக்குடியில் மினி டைடல் பூங்கா கட்டடத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

News image
திறப்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின்- DIPR
Updated On :29 டிசம்பர் 2024, 11:57 am

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா கட்டடத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச. 29) திறந்துவைத்தார்.

மீளவிட்டானில் 63,000 சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் ரூ. 32.50 கோடி மதிப்பில் பல்வேறு அம்சங்களுடன் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.

கள ஆய்வு மேற்கொள்ள 3 நாள்கள் பயணமாக தூத்துக்குடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக மீளவிட்டானில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை திறந்துவைத்தார்.

பல்வகை உணவுக் கூடம், வாகன நிறுத்துமிடம், உடற்பயிற்சிக் கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மினி டைடல் பூங்கா மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, கீதா ஜீவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.