யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

News image
கோப்புப்படம்
Updated On :30 டிசம்பர் 2024, 3:13 am

DIN

சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என தகவல் தெரியவந்துள்ளது.

சென்னை வடபழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. நள்ளிரவு 12.15 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதையடுத்து அதிகாலை கோயில் நடை திறந்த பின் சோதனை செய்ததில் வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கோயிலில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள் மற்றும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.