போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

நாகை - இலங்கை படகு சேவை: புத்தாண்டில் மீண்டும் தொடக்கம்!

நாகை - இலங்கை படகு சேவை குறித்து...

News image
நாகை - இலங்கை இடையே இயக்கப்படும் படகு சேவை
Updated On :30 டிசம்பர் 2024, 3:54 am

DIN

நாகை - இலங்கை இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு சேவை புத்தாண்டு முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையேயான படகு சேவை சுமார் 40 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கடந்த அக். 14, 2023 முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போது வடகிழக்கு பருவமழை காரணமாக கப்பல் சேவை 10 நாள்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.

நாகை - காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை மீண்டும் 2024 ஆகஸ்ட் 16 அன்று தொடங்கியது. இந்த நிலையில், இந்தப் படகு சேவை வானிலை காரணமாக நவ. 19 முதல் டிச. 18 வரை நிறுத்தப்படும் என்று கப்பல் சேவை நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஜனவரி 2 முதல் மீண்டும் இந்த சேவை தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கான டிக்கெட் முன்பதிவு டிச. 25 முதல் தொடங்கியுள்ளது. வாரத்திற்கு 6 நாள்கள் இந்தச் சேவை இருக்கும் என்றும், ஒரு சுற்றுக்கான போக்குவரத்து டிக்கெட் செலவு ரூ. 35,000 வரை நிர்னயிக்கப்பட்டுள்ளதாக கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.