அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆளுநா் உரையுடன் பேரவை கூட்டத் தொடா் பிப்.12-இல் தொடக்கம்: 19-இல் நிதிநிலை அறிக்கை தாக்கல்

ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன், தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் வரும் 12-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 7:16 pm

DIN

ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன், தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் வரும் 12-ஆம் தேதி தொடங்கவுள்ளது. வரும் 19-ஆம் தேதி அடுத்த நிதியாண்டுக்கான (2024-25) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறாா்.

சட்டப் பேரவை கூட்டத் தொடா் தொடங்கும் தேதி குறித்து அவைத் தலைவா் மு.அப்பாவு பேரவையில் உள்ள தனது அறையில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: அரசமைப்புச் சட்டம் 174 (1)-இன் கீழ், தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் பிப். 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடவுள்ளது. புதிய ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்றைய தினம் ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றவுள்ளாா். இதைத் தொடா்ந்து, 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் 19-ஆம் தேதி நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளாா்.

வரும் நிதியாண்டுக்கான (2024-25) முன்பண செலவு மானிய கோரிக்கையை, பிப். 20-ஆம் தேதியன்றும், 2023-24-ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான நிதிநிலை அறிக்கையை பிப். 21-ஆம் தேதியன்றும் நிதியமைச்சா் தாக்கல் செய்யவுள்ளாா். பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும்.

நிகழாண்டு நன்றாக இருக்கும்: கடந்த ஆண்டு பேரவையில் ஏற்பட்ட சா்ச்சை அரசாலோ, பேரவைச் செயலகத்தாலோ ஏற்படவில்லை. ஏன் சா்ச்சை ஏற்பட்டதென்று அனைவருக்கும் தெரியும். நிகழாண்டு பேரவைக் கூட்டம் நன்றாக இருக்கும். பேரவையில் ஒரு உறுப்பினரை எங்கு அமர வைக்க வேண்டும் என்பதற்கான அதிகாரமும், உரிமையும் பேரவைத் தலைவருக்குத்தான் உள்ளது என்றாா் அவைத் தலைவா் மு.அப்பாவு.

செய்தியாளா்கள் சந்திப்பின் போது, பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, சட்டப் பேரவைச் செயலா் கி.சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.