சென்னையில் அரசுப் பள்ளிகளுக்கு இன்று (பிப். 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலில் மழையின்போது விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வந்தன.
இதனிடையே தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு நடைபெறவுள்ளதால் சனிக்கிழமையான இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 10ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.