காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். விஜயதாரணி இன்று சனிக்கிழமை (பிப்.17) பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தில்லியில் பாஜக தேசியக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைவார் எனக் கூறப்படுகிறது.
வரும் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விஜயதாரணி விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைமை மறுப்பு தெரிவித்தாகவும் இதையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் கடந்த சில நாள்களாக தில்லியில் விஜயதாரணி முகாமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.