விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 10 பேர் பலி

விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பத்து பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தனர்.
விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து
விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே சிவகாசியை சேர்ந்த விக்னேஷ்(45) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு தொழிற்சாலையில் 55 அறைகளில் 150க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசு தயாரிக்கத் தேவையான மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடித்து சிதறியதில் 5-அறைகள் தரைமட்டமாகின.

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து
தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை!

இந்த வெடி விபத்தில் அங்கு பணியிலிருந்த 5 விருதுநகர் மாவட்டம் ராமுதேவன்பட்டி வின்னர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ரமேஷ் (26), கருப்பசாமி (29), அம்பிகா ( 30), முருகஜோதி (50), முத்து (45), சாந்தா (35), குருசாமி (50), 5 பெண் 4 ஆண் தொழிலாளர்கள் உள்பட 10 பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 7 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி மற்றும் கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் அறிந்த சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் ஏழாயிரம் பண்ணை தீயணைப்புத்துறையினர். விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com