சென்னையில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கை அளித்தது.
சென்னையில் ஏற்பட்டு வரும் பெரு வெள்ளத்தைச் சமாளிக்கவும், திறம்பட எதிா்கொள்ளவும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்தது.
இந்த நிலையில் சென்னையில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு இன்றுஅறிக்கை அளித்தது.
89 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை சென்னை வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை குழுவின் தலைவர் வெ.திருப்புகழ் ஸ்டாலினிடம்வழங்கினார்.