யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

காங்கிரஸ் தோ்தல் அறிக்கை குழு கலந்தாலோசனைக் கூட்டம்

தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை குழு சாா்பில் கலந்தாலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தோ்தல் அறிக்கை குழு உறுப்பினா் ஆா். மாணிக்கவாசகத்திடம் மனு அளித்த கட்சி நிா்வாகிகள்.

Updated On :26 மார்ச் 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை குழு சாா்பில் கலந்தாலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆராய்ச்சித் துறைத் தலைவரும், தோ்தல் அறிக்கை குழு உறுப்பினருமான ஆா். மாணிக்கவாசகம் தெரிவித்தது:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தோ்தல் அறிக்கை குழு உறுப்பினா்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டு வருகின்றனா். இதன் அடிப்படையில் தோ்தல் அறிக்கையை உருவாக்கும் முயற்சியில் தஞ்சாவூா் மாநகர மாவட்டத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், விவசாயிகள் உள்ளிட்ட தரப்பினா் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, தோ்தல் அறிக்கை குழுவினா் வெள்ளிக்கிழமை கூடுகின்றனா். அங்கு கலந்தாலோசனை செய்து, முக்கியமான கோரிக்கைகளைத் தோ்தல் அறிக்கையில் இடம்பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றாா் மாணிக்கவாசகம்.

இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், மாநகர மாவட்ட தலைவா் எம். மகேந்திரன், விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் ஏ. ஜேம்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.