பிரதமர் மோடியை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை: தொல்.திருமாவளவன்

ஈவிஎம் மோசடி: திருமாவளவன் குற்றச்சாட்டு, போராட்டத்திற்கு அழைப்பு
பிரதமர் மோடியை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை: தொல்.திருமாவளவன்

பிரதமர் மோடியை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்,

ஈவிஎம் பிரதமர் மோடி.

இது வட இந்தியர்கள் மோடிக்கு வைத்துள்ள 'நிக் நேம்'. செல்லப்பெயர்.

"மக்கள் இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சதிவேலைகள் செய்து மோசடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் மோடி" -என கூறி, ஈவிஎம்' மை எதிர்த்து வட இந்தியாவில் போராட்டம் வலுக்கிறது.

ஆதலால், சிறுத்தைகள் மீண்டும் களமிறங்குவோம்.

நாட்டைக் காக்க- நாடாளுமன்ற சனநாயகம் காக்க - தேர்தல் முறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மையைக் காக்க-

சிறுத்தைகள் யாவரும் சினந்தெழுவோம்! - மோடியின் ஈவிஎம் சதி வீழ்த்த இணைந்தெழுவோம்!

பிப்ரவரி 23 - வெகுண்டெழுவோம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com