சென்னை: தமிழகத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
நேற்று பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பச்சைத் துண்டு அணிந்து பேரவைக்கு வந்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
உழவர்களை உச்சத்தில் வைக்கிறது தமிழ்ச் சமூகம் என்று குறிப்பிட்டு, தமிழ் இலக்கியங்களில் விவசாயத்தையும், வேளாண்மையையும், உழவர்களைப் பற்றியும் உயர்வாகப் புகழ்ந்திருக்கும் பாடல்களை எடுத்துரைத்து தனது வேளாண் பட்ஜெட்டைத் தொடங்கியிருக்கிறார்.