இரு பெண் குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை!

இரு பெண் குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்ததில் மூவரும் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.
இரு பெண் குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை!

ராணிப்பேட்டை: வாலாஜா ரயில் நிலையத்தில் குடும்ப பிரச்னை காரணமாக தாய், இரு பெண் குழந்தைகளுடன் திருவனந்தபுரம் விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த வேலம் கிராமம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் அறிவழகன் ( 45). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராணுவத்தி்ல் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவருக்கும், இவரது முதல் மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணிலா என்பவரை அறிவழகன் 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஜனுஷ்ஸ்ரீ( 5 ), தரணிகா (3) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இரு பெண் குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை!
சமையல் தொழிலாளி அடித்துக் கொலை!

முதல் மனைவியின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அந்த வழக்கு தள்ளுபடி ஆனதாக கூறப்படுகிறது. இதனால் முதல் மனைவி விஜயலட்சுமி அறிவழகனுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதற்காக வேலம் கிராமத்துக்கு வந்துள்ளார் . இதனால் முதல் மனைவிக்கும் இரண்டாவது மனைவியான வெண்ணிலா மற்றும் கணவர் அறிவழகன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கடும் மன அழுத்தத்திற்கு ஆளான வெண்ணிலா தனது இரு பெண் குழந்தைகளுடன் வேலம் கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் முன்பாக தனது இரு குழந்தைகளை கைகளில் கெட்டியாக பிடித்துக்கொண்டு வாலாஜா ரயில் நிலையத்திலேயே தண்டவாளத்தில் இறங்கி நின்றுள்ளார் .

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் திருவனந்தபுரம் விரைவு ரயில் மோதியதில் மூன்று பேரும் உடல் சிதறி பலியாகினர்.

இதுகுறித்து காட்பாடி ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காட்டுத் தீயாக அப்பகுதியில் பரவியது. தகவல் அறிந்து வெண்ணிலாவின் உறவினர்கள் விரைந்து வந்து உடல் சிதறி இறந்து கிடந்த குழந்தைகளின் உடல்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறினர்.

இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் இருந்த சக பயணிகளின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

காட்பாடி ரயில்வே காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காட்பாடி ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com