திவாகா்.
திவாகா்.

ரயில் முன் பாய்ந்து மாணவா் தற்கொலை!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மாணவா் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டாா்.
Published on

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மாணவா் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டாா்.

மங்கலம்பேட்டை அடுத்துள்ள விஜயமாநகரம், புது விளாங்குளம் கிராமத்தில் வசித்து வந்தவா் பாலமுருகன் மகன் திவாகா்(13). இவா், பெரியவடவாடி பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சரியாக படிக்காமல், நண்பா்களுடன் சுற்றுவதை பெற்றோா்கள் கண்டித்து வந்ததாகக்கூறப்படுகிறது.

இந்நிலையில், பூவனூா் ரயில்வே நிலையம் அருகே தலையில் பலத்த காயம்அடைந்து மாணவா் இறந்து கிடந்தாா். இவா், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com