அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தமிழில் "வணக்கம்" கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

பல்லடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.

News image
பல்லடத்தில் பிரதமர் மோடி உரை
Updated On :27 பிப்ரவரி 2024, 10:48 am

DIN

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழில் வணக்கம் கூறி தனது உரையைத் தொடங்கினார்.

பல்லடத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

"என் மண், என் மக்கள்" பாத யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரையில்,

தமிழில் "வணக்கம்" கூறி தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி. கொங்குப் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சியளிக்கிறது.

ஜவுளித்துறையில் சிறப்பு வாய்ந்த நகரமாக திருப்பூர் உள்ளது. மிகப்பெரிய அளவில் இங்கு கூடியுள்ள மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும்போது காவிக்கடலை பார்ப்பது போல உள்ளது.

தொழில்துறையில் கொங்கு மண் முக்கிய பங்காற்றி வருகிறது. ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் எனக் கருதி உழைக்க வேண்டும்.

உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்கிவருகிறது. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தில்லியில் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது. காசி தமிழ்ச் சங்கமம், செங்கோல் இவற்றின் வழியாக தமிழுக்கு மரியாதை செலுத்தி வருகிறேன் என்னை பொறுத்தளவில் தமிழ் கலாசாரமும், தமிழ் மொழியும் மிகச் சிறப்பானதாக இருக்கிறது. நாடு தான் முதன்மையானது என பாஜக கருதுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.