திருச்சியில் பிரதமா் பங்கேற்கும் விழாவில் திரளானோரை பங்கேற்கச் செய்ய முடிவு


திருச்சியில் வரும் மாா்ச் 11ஆம் தேதி பிரதமா் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில், புதுக்கோட்டையில் இருந்து ஏராளமானோரைத் திரட்டி பங்கேற்கச் செய்ய பாஜக முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மேற்கு மாவட்ட பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் என். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பேசினாா்.
மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. விஜயகுமாா், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ஏவிசிசி கணேசன், ஜீவானந்தம், மாவட்டப் பொதுச் செயலா்கள் தியாகராஜன், சிவசாமி கண்டியா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...