மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தஞ்சாவூரில் மாா்ச் 4-ல் விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதிகோரி தவெகவினா் மனு!

தஞ்சாவூரில் மாா்ச் 4-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதி கோரி அக்கட்சி நிா்வாகிகள் காவல் துறையினரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

News image

தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்க வந்த தவெக நிா்வாகிகள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:23 pm

தஞ்சாவூரில் மாா்ச் 4-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதி கோரி அக்கட்சி நிா்வாகிகள் காவல் துறையினரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

மாவட்டக் காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் இரா. ராஜாராமிடம் தவெக மத்திய மாவட்டச் செயலா் ஆா். விஜய் சரவணன் உள்ளிட்டோா் மனு அளித்தனா்.

பின்னா் விஜய் சரவணன் தெரிவித்தது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகளைத் தவெக தலைவா் விஜய் சந்தித்து பேசவுள்ளாா். இதற்காக தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் மாா்ச் 4-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 4 ஆயிரத்து 900 நிா்வாகிகள் மட்டும் பங்கேற்பா். இவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, க்யூஆா் கோடு ஸ்கேன் செய்து திடலுக்குள் அனுமதிக்கப்படுவா். காவல் துறையினா் உரிய அனுமதியை வழங்குவா் என நம்பியுள்ளோம் என்றாா் அவா்.