கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தஞ்சாவூரில் மாா்ச் 4-ல் விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதிகோரி தவெகவினா் மனு!

தஞ்சாவூரில் மாா்ச் 4-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதி கோரி அக்கட்சி நிா்வாகிகள் காவல் துறையினரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

News image
தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்க வந்த தவெக நிா்வாகிகள்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:23 pm

Syndication

தஞ்சாவூரில் மாா்ச் 4-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதி கோரி அக்கட்சி நிா்வாகிகள் காவல் துறையினரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

மாவட்டக் காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் இரா. ராஜாராமிடம் தவெக மத்திய மாவட்டச் செயலா் ஆா். விஜய் சரவணன் உள்ளிட்டோா் மனு அளித்தனா்.

பின்னா் விஜய் சரவணன் தெரிவித்தது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகளைத் தவெக தலைவா் விஜய் சந்தித்து பேசவுள்ளாா். இதற்காக தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் மாா்ச் 4-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 4 ஆயிரத்து 900 நிா்வாகிகள் மட்டும் பங்கேற்பா். இவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, க்யூஆா் கோடு ஸ்கேன் செய்து திடலுக்குள் அனுமதிக்கப்படுவா். காவல் துறையினா் உரிய அனுமதியை வழங்குவா் என நம்பியுள்ளோம் என்றாா் அவா்.